kalLo prAnDs!

WellcomE to My Profile..

Thursday, March 15, 2007

காதலைப்பற்றி கவிதை எழுத..

புதிய இரவு..
அதில்,
இனிய கனவு...
புரிந்து கொண்டோம்.
இனி ஏது?
கவலை நமக்கு?

அருகில் வா!
உன் உயிரைத்தா..
கண்கள் பார்த்தோம்
காதல் வளர்த்தோம்..
அதில் காமம் எதற்கு?

உன்னில் நான் என்னில் நீ
இது உரிமை காட்டும் வார்த்தை.
மண்ணில் நீ பிறந்தது..
என் வாழ்க்கை கண்ட பாக்கியம்..

கரும்பின் இனிமை,
அது காதலில் அருமை...
என்று சில கவிஞர் சொல்லும் போதிலே...
அவர் தாய் கொண்ட
பெண்மை கண்ட பெரும்
தலைவலி அல்லவா?

அவள் கண்மணியில் கண்ட குளிர்மை
அந்த கார்மேகம் தந்ததில்லை.
அவள் கண்ணிமை கொண்ட கோணல்
அலையிடம் தோல்வி கண்டதில்லை.

காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.
கனவுகண்டு கவி வடிக்க..
எனக்கேது எல்லை.

---பிறை---

3 comments:

Ramanan Sharma said...

நல்ல கவிதை.
இப்படியே தொடருங்கள்.
உங்கள் காதல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

##அவள் கண்மணியில் கண்ட குளிர்மை
அந்த கார்மேகம் தந்ததில்லை.##
கண்ணையே பாத்துக்கொண்டிருப்பீங்களோ?

##காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.##
ஏன்டாப்பு யாரும் தெரிஞ்ச ஆக்கள் பாத்தா வில்லங்கமாயிரும் எண்டு பயமோ?

நான் நக்கலடிச்சதால பிறைதீசிண்ட முதலாவது மறுமொழி போடுற ஆள் இந்த முறை பின்வாங்கிட்டாங்களோ?
சரி சரி இனிமேல் நான் ஒண்டும் சொல்லமாட்டன். நீங்க முதலாவதாயே வந்து கொமன்ற் போடுங்கோ.

Purathani said...

என்ன
காதல் கவிதை வடிக்கிறீங்க?
புதிய கனிஷ்ட மாணவிகள் யாரையும் சரக்கு போட்டுட்டீங்களோ?

M A U R A N said...

hey good job
வெற்றிகள் இன்பங்கள் நிறைந்து வர வாழ்த்துக்கள்

முயற்ச்சிகள் தொடருட்டும்