kalLo prAnDs!

WellcomE to My Profile..

Thursday, March 15, 2007

காதலைப்பற்றி கவிதை எழுத..

புதிய இரவு..
அதில்,
இனிய கனவு...
புரிந்து கொண்டோம்.
இனி ஏது?
கவலை நமக்கு?

அருகில் வா!
உன் உயிரைத்தா..
கண்கள் பார்த்தோம்
காதல் வளர்த்தோம்..
அதில் காமம் எதற்கு?

உன்னில் நான் என்னில் நீ
இது உரிமை காட்டும் வார்த்தை.
மண்ணில் நீ பிறந்தது..
என் வாழ்க்கை கண்ட பாக்கியம்..

கரும்பின் இனிமை,
அது காதலில் அருமை...
என்று சில கவிஞர் சொல்லும் போதிலே...
அவர் தாய் கொண்ட
பெண்மை கண்ட பெரும்
தலைவலி அல்லவா?

அவள் கண்மணியில் கண்ட குளிர்மை
அந்த கார்மேகம் தந்ததில்லை.
அவள் கண்ணிமை கொண்ட கோணல்
அலையிடம் தோல்வி கண்டதில்லை.

காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.
கனவுகண்டு கவி வடிக்க..
எனக்கேது எல்லை.

---பிறை---