kalLo prAnDs!

WellcomE to My Profile..

Monday, December 10, 2007

அர்த்தமற்ற வார்த்தைகள்





நான் நின்பேன் என நீ அறிந்திருந்தும் - ஏனோ


நீ நினைக்கிறாய் நான் அறியவில்லை என்று

விடைக்கு ஒரு கேள்வி சொல்வேன் -


" கேள்விக்கென்ன பதில் ? "

Thursday, March 15, 2007

காதலைப்பற்றி கவிதை எழுத..

புதிய இரவு..
அதில்,
இனிய கனவு...
புரிந்து கொண்டோம்.
இனி ஏது?
கவலை நமக்கு?

அருகில் வா!
உன் உயிரைத்தா..
கண்கள் பார்த்தோம்
காதல் வளர்த்தோம்..
அதில் காமம் எதற்கு?

உன்னில் நான் என்னில் நீ
இது உரிமை காட்டும் வார்த்தை.
மண்ணில் நீ பிறந்தது..
என் வாழ்க்கை கண்ட பாக்கியம்..

கரும்பின் இனிமை,
அது காதலில் அருமை...
என்று சில கவிஞர் சொல்லும் போதிலே...
அவர் தாய் கொண்ட
பெண்மை கண்ட பெரும்
தலைவலி அல்லவா?

அவள் கண்மணியில் கண்ட குளிர்மை
அந்த கார்மேகம் தந்ததில்லை.
அவள் கண்ணிமை கொண்ட கோணல்
அலையிடம் தோல்வி கண்டதில்லை.

காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.
கனவுகண்டு கவி வடிக்க..
எனக்கேது எல்லை.

---பிறை---

Friday, February 2, 2007

வெண் சுருட்டு

பாவி அவன்...
படுபாவி..

நானும் என் தோழிகளும்
கூடியிருந்த வேளை...
வந்தான் அவன்...
நயவஞ்சனை பூத்த புண்ணகை...
நயவஞ்சகன் அவன்...
என்னை மட்டும் உருவி இழுத்துச் சென்று...
அவன் ஆசை அனையும் வரை...
அவன் உதட்டை என் இதழுடன் வைத்து..
ஆசை அனையும் வரை...
அனுபவித்து....

பாவி
படுபாவி அவன்..

அனைந்தது அவன் ஆசை..
என்மூச்சை அனைக்க
அவன் காழுக்கடியில் என்னை கசக்கினான்...

கள்ள மனம் கொண்ட நயவஞ்சகன்...
இந்த வெண்சுருட்டின் மீது
வெள்ளைமனம் கொள்ளக்கூடாதா?
-prai-