kalLo prAnDs!

WellcomE to My Profile..

Tuesday, April 1, 2008

ஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..




காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.

இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.

காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
பிறை

2 comments:

sagar said...

ஓஹோ அப்படியா சங்கதி ? ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்....

Unknown said...

// ஓஹோ அப்படியா சங்கதி ? ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.//
ஒருகாலத்தில் காலைப்பொழுதும் கன்டீனுமாக நடந்தது... இப்போது இல்லை..