காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.
இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.
காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.
இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
பிறை
2 comments:
ஓஹோ அப்படியா சங்கதி ? ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்....
// ஓஹோ அப்படியா சங்கதி ? ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.//
ஒருகாலத்தில் காலைப்பொழுதும் கன்டீனுமாக நடந்தது... இப்போது இல்லை..
Post a Comment